எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே....சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் ஜஅட்டமாசித்தி யுபதேசித்த படலம்ஸநடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது.ஆலமரத்தைத் தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சிக் கோயிலைப் போல பொற்றாமரைக் குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமூர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்தி பட்டமங்கலத்தில் எழுந்தருளிய வரலாற்றைப் பார்ப்போம்
திருக்கையிலையில் ஒரு கல்லால மரத்தின் கீழே சிவபெருமான் அன்பும் அருளும் நிறைந்த போக தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அம்பிகை இருந்து கொண்டிருந்தார்.சுற்றிலும் நின்ற சிவகணத் தலைவர்களுக்கும் சனகர், சனத்குமாரர் முதலிய நால்வர்க்கும் நல்லுரைகள் வழங்கிக்கொண்டிருந்தார். அந்தப் புனிதமான சூழ்நிலையில் கார்த்திகைப் பெண்களாகிய யக்ஷமாதர்கள் ஜஅம்பா, துலா, நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி ஸஅறுவரும் சிவச்சின்னங்கள் துலங்கிட அங்கு வந்தனர்.முருகனுக்குப் பாலூட்டியவர்கள் அவர்கள்.சிவபெருமானின் அருகில் பணிந்து நின்று, பின்னர் திருவடியை வணங்கினர். "கருணைக்கடலே! எங்கள் பிதாவே! நாங்கள் எளியவர்கள். எங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்து அருளவேண்டும்", என்று வேண்டிக்கொண்டனர்.
சிவபெருமான் தம்முடைய இடப்பக்கத்தில் இருந்த அம்பிகையைச் சுட்டிக்காட்டினார். "உமா தேவியே பராசக்தி. மஹேஸ்வரி. அணிமா முதலிய அஷ்டமாசித்திகளும் பணிப்பெண்களாகத் தன்னைச் சுற்றிலும் இருந்து எப்போதும் குற்றேவல் புரிந்து கொண்டிருக்க வீற்றிருப்பவள். ஆகையால் நீங்கள் அம்பிகையை உங்கள் உள்ளங்களில் இருத்தித் தியானம் செய்யவேண்டும். அப்படியானால் அவள் உங்கள் வினைகளை நீக்கி, உங்களை அஷ்டமாசித்திகளுக்குப் பாத்திரர்களாக ஆக்கி,அவளே அந்த சித்திகளை உங்களுக்குக் கொடுத்தருள்வாள்", என்றார்.
பிறகு அவர் அவர்களுக்கு அந்த சித்திகளை உபதேசித்தார். ஆனால் அந்த அறுவருமே அம்பிகையைத் தியானம் புரியாது விட்டுவிட்டனர். ஆகையால் உபதேசம் அவர்களுக்கு அறவே மறந்துபோயிற்று.இதனால் கோபமுற்ற சிவபெருமான், அவர்களைப் பட்ட மங்கை என்னும் தலத்தில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் கற்பாறைகளாகக் கிடக்கும்படி சபித்துவிட்டார். அவர்கள் சாபவிமோசனம் கேட்டனர். ஆயிரம் ஆண்டுகள் அவ்வாறு பாறைகளாகக் கிடந்தபின்னர் தாமே மதுரையிலிருந்து அங்கே வந்து அவர்களின் சாபத்தைப் போக்கி,அவர்களுக்குப் பழைய வடிவத்தையும் தந்து, அத்துடன் அஷ்டமா சித்திகளையும் விளக்கிக் காட்டுவதாகச் சொன்னார். அவ்வண்ணமே அந்த அறுவரும் பட்டமங்கையின் ஆலமரத்தடியில் பாறைகளாகக் கிடந்தனர்.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து மதுரை சொக்கநாதப்பெருமான் ஞானாசிரிய வடிவம்ஜதட்சிணாமூர்த்திஸ தரித்து பட்டமங்கையில் அந்த அறுவர் கிடக்கும் இடத்தில் தோன்றினார். அவர்களுடைய வினைகள் கெட்டு, சாபவிமோசனமாகுமாறு திருக்கண் பார்வையால் அருளினார். பாறை வடிவம் நீங்கப்பெற்ற அறுவரும் பக்தியுடன் சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்தனர்.
கார்த்திகைப் பெண்களுக்கு சிவனருள் கிடைக்கப்பெற்ற தலம்தான் பட்டமங்கலம். இங்கே ஈசன் தட்சிணாமூர்த்தி பகவானாக அருள் தரிசனம் தருகிறார். பொதுவாக, எல்லாக் கோயில்களிலும் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். இத்தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து, இம்மை மறுமை பயனை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார். இவ்வாறு ஐயன் கிழக்கு நோக்கி தரிசனம் தருவதை திருவிளையாடல் புராணமும் குறிப்பிடுகிறது. இந்த தட்சிணாமூர்த்தி பகவானின் காலடியில் பிரம்மாவை அன்னபட்சி வடிவிலும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காணலாம்.
தலவிருட்சமான ஆலமரம், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி பகவான் சந்நதி அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும். இந்த தட்சிணாமூர்த்தி பகவானை 108 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். திருமணத் தடைகளால் தவிக்கும் கன்னியர் இந்த ஆலமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி, வழிபட தடைகள் நீங்கி, விரைவிலேயே திருமணம் நடைபெறும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இம்மரத்தில் தொட்டில் கட்டினால், மழலைச் செல்வம் கிடைக்கப்பெறுவார்கள். குழந்தைகள் நாக்கில் சரஸ்வதி மந்திரத்தை எழுதி, தட்சிணாமூர்த்தி பகவானை 108 முறை வலம் வரச்செய்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
இக்கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சந்நதிகளும் உள்ளன. உண்டியலே இல்லாத, அர்ச்சனை, தரிசனம் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம்.
இல்லாத வித்தியாசமான கோயில் இது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது இத்தலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு