முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் 44 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (23.03.2017) நடைபெற்ற முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 44 மனுக்கள் பெறப்பட்டது.

புதிய குடும்ப அட்டை

பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தோர்கள் மனுகள் அளித்தனர். மாவட்ட கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் உதவி இயக்குநர் செல்வமூர்த்தி மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்