முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் மரணம் அடைந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்திற்கு அரசின் உதவி தொகை : கலெக்டர் பழனிச்சாமி வழங்கினார்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமம், பள்ளித்தெருவில் வசித்து வந்த வேதகிரீஸ்வரன் என்பவர் சௌதி அரேபியாவில் கொத்தனாராக பணி புரிந்து வந்தார்.

மாரடைப்பால்

இந்நேர்வில் வேதகிரீஸ்வரன் என்பவர் கடந்த 30.07.2016 அன்று மாரடைப்பால் இறந்து விட்டார். இறந்து போன வேதகிரீஸ்வரன் என்பவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இறந்து போன வேதகிரீஸ்வரன் என்பவின் குடும்ப கஷ்டசூழ்நிலையைக்கருத்தில் கொண்டு அன்னாரது குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியாக ரூபாய் 1,66,426- (ரூபாய ஒரு இலட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து நானூற்றி இருபத்தி ஆறு மட்டும்) வழங்கி உத்திரவிட்டது. வரப்பெற்ற ரூபாய் 1,66,426- (ரூபாய ஒரு இலட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து நானூற்றி இருபத்தி ஆறு மட்டும்) -க்கான காசோலையை இறந்த .வேதகிரீஸ்வரன் என்பவரின் மனைவி வே.உமாவிடம் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்