முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளிக்கு சீர் வழங்கும் விழா 

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

கும்முடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளிக்கு சீர் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊர்வலம்

இவ்விழாவில் 150க்கும் பேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான அனைத்து பொருள்களையும் சீர் வரிசையாக அலங்கரித்து மங்கல இசையோடு ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்தும். அரசு பள்ளிகளின் சீறப்பு அம்சங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரமாக சொல்ல பட்டது. பின்னர் கவரப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊர்வலமாக சீர்வரிசைகலோடு பெற்றோர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் வலம் வந்தனர்.மேலும் இவ்விழாவை பள்ளி தலைமை ஆசிரியை ப.திருப்புரசுந்தரி வரவேற்புரை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். விழாவின் சிறப்பு அழைப்பாலர்களாக மாவட்ட உதவி திட்ட அலுவலர் எம் கே. ஞானசேகரன், உதவி தொடக்க கல்வி அலுவலர் பா.மீனாதேவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ சேகர், மேற்பார்வையாளர் புனிதவதி, ஆசிரியர் பயிற்றுனர் ஜெ.வித்யாசளிநி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்