முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: தொப்பியுடன் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்பு வேட்பாளர் டிடிவி தினகரன், அவருடைய கட்சி சின்னமான தொப்பியுடன் வந்து நேற்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

8 முனை போட்டி

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அ தி.மு.க. சார்பாக டிடிவி.தினகரன், தி.மு.க. சார்பாக மருதுகணேஷ், ஒ.பி.எஸ். அணி சார்பாக மதுசூதனன், தீபா பேரவை சார்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் சார்பாக கலைக்கோட்டுதயம், பாரதீய ஜனதா சார்பாக கங்கை அமரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுத் தாக்கல்

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்பு வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் தனது வேட்பு மனுவை நேற்று மதியம் 1.30 மணியளவில் தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்த போது தனக்கு அறிவிக்கப்பட்ட சின்னமான தொப்பியை அணிந்து வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  (நேற்று) மாலை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக நேற்று ஒ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் மதுசூதனன், பாரதீய ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்