முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை ஜோஸ்னா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆஸ்திரேலியாவின் ராச்செல் கிரின்ஹாமை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11-6, 8-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ராச்செல் கிரின்ஹாமை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா அடுத்த ஆட்டத்தில் எகிப்தின் ரனிம் எல் வெலிலியை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை தீபிகா பலிக்கல் 4-11, 5-11, 13-11, 1-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் லாரா மாசாரோவிடம் தோற்று வெளியேறினார். முன்னதாக இந்திய வீரர் சவுரவ் கோஷல் தகுதி சுற்றுடன் நடையை கட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்