முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், திருப்பூர்  மாநகராட்சி அலுவலகத்தில்,                            திருத்தியமைக்கப்பட்ட  தேசிய  காசநோய்  தடுப்புத்  திட்டம்  சார்பில்   உலக காசநோய் தின விழாவினை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி  கொடியசைத்து  தொடங்கி  வைத்து  பேரணியில்  பங்கேற்றார்.

            நாடு முழுவதும் இன்று மார்ச் 24-ம் தேதி  உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் சார்பில் காசநோய் பற்றிய பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியினை மாநகராட்சி அலுவலகத்தில்  மாவட்ட கலெக்டர்  கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பியவாறும்  ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரி, சிவபார்வதி நர்சிங் கல்லூரி, ரேவதி நர்சிங் கல்லூரி, மகாராணி நர்சிங் கல்லூரியைச் சார்ந்த  500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியானது  திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில்  தொடங்கி  டைமண்ட் திரையரங்கம் மற்றும் தாடிகார முக்கு, நடராஜ் திரையரங்கம்  சாலை வழியாக தெற்கு ரோட்டரி மண்டபத்தை வந்தடைந்தது.

இப்பேரணியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன், காசநோய் துணை இயக்குநர் மரு.தீனதாயாள், சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் மரு.விஜயகுமார்,கேவை சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.தமிழ்மணி,  சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.ஜெயந்தி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.கேசவன், மாநில காசநோய் மைய விளம்பர அலுவலர் சண்முகசுந்தரம், மாணவ, மாணவியர்கள்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்