முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரியில் வருவாய்துறையினர் சார்பில் 37 மனுக்களுக்கு தீர்வு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      சென்னை

பொன்னேரி வட்டம்,கோளுர் ஊராட்சி,புதுச்சேரி மேடு கிராமத்தில் வருவாய்துறை சார்பில் அம்மா திட்ட முகாம் நடைப்பெற்றது.

80 மனுக்கள்

இதில் 80 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.பெறப்பட்ட மனுக்களில் முதியோர் திட்டம் 25 மனுக்களுக்கும்,குடும்ப அட்டை பெயர் நீக்கல்,பெயர் சேர்த்தல் 12 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. இதற்கான சான்றிதழ்களை பொன்னேரி வட்டாட்சியர் ஐவண்ணன்,சிறப்பு தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஆகியோர் வழங்கினர். வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன்,வருவாய் ஆய்வாளர் பாலாஜி,கிராம நிர்வாக அலுவலர்கள் சேஷாத்திரி,ஜெய்பிரகாஷ்,சக்திவேல்,செல்வராஜ்,தனசேகர்,பூபாலன்,புதுச்சேரி மேடு கிராம நிர்வாகிகள் டில்லி, சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்