முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புவனேஸ்வரத்தில் பா.ஜ. ஆட்சிமன்ற குழுக்கூட்டம்: முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர், மார்ச்.26 பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழுக்கூட்டம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி புவனேஸ்வரத்தில் நடக்கிறது. கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழுக்கூட்டம் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி ஆரம்பமாகிறது. கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறும். இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமீத்ஷா, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் புவனேஸ்வரத்தில் நடைபெற உள்ளது என்றார்.

மாநில பா.ஜ. தலைவர் பசந்த் பாண்டா கூறுகையில் புவனேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு நடந்தால் 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் மாநில தலைவர்களையும் தொண்டர்களையும் ஊக்குவிக்கும் என்றார். கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் என்றும் பாண்டே கூறினார்.

ஆட்சிமன்ற குழுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஒடிசா மாநில பாரதிய ஜனதாவின் அரசியல் பொறுப்பாளர் அருண்சிங் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பு இணை செயலாளர் செளதான் சிங் ஆகியோர் இன்று புவனேஸ்வர் நகரத்திற்கு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்