முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளி வளர்ச்சிக்காக கல்வி சீர் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்விக்குழு

 கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் உள்ள ஒன்றிய துவக்கப் பள்ளியின் வளர்ச்சிக்கு வழி செய்யும் வகையில் பள்ளியின் ஆசிரியர்கள், கிராம கல்விக் குழு, பள்ளி மேலாண்மை குழு சார்பாக பள்ளிக்கு அவர்களால் இயன்ற கல்வி சீர் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இதனை ஒட்டி துண்டு பிரசுரம் ஊராட்சி முழுக்க பொதுமக்களுக்கும், பல்வேறு முக்கிய பிரமுகர்கள். தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் சிறுபுழல்பேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அவரவர்களால் இயன்ற கல்வி சீர் பொருட்களுடன் பள்ளிக்கு சென்றனர்.

 

விழாவிற்கு சிறுபுழல்பேட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிக்குமார், ஊராட்சி மன்ற செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பானு வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் ரேவதி,ஆசிரியர் ஓரல் ராலபர்ட் முன்னிலை வகித்தனர். இந்த கல்வி சீர் வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக உதவி தொடக்க கல்வி அலுவலர் மீனாதேவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ சேகர் கலந்துக் கொண்டு கல்வி சீரை பெற்று ஊர் மக்களை வாழ்த்தி பேசினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்