முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னாத்தூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா அன்னாத்தூர் கிராமத்தில் நேற்று அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டாட்சியர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

முதியோர் உதவி தொகை

 

துணை வட்டாட்சியர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 59 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது.

 

அதில் 21 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 38 மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்