எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார துறையின் சார்பில் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட நல்லதங்காள் ஓடை மற்றும் உடையார்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர், ச.ஜெயந்தி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டு பார்வையிடப்பட்டது.
செய்தியாளர் பயணத்தில் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புணரமைத்திடும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் 13.03.2017அன்று காஞ்சிபுரம், மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்திலுள்ள மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டம் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்போடு மராமத்துப் பணிகள் செய்வதுதான் குடிமராமத்து பணிகள் திட்டமாகும். இத்திட்டத்தில் முதல் கட்டமாக தமிழக அரசால் தமிழகம் முழுவதும் நடப்பு நிதியாண்டில் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி பாசனத் திட்டத்தின் கீழ் 47 பணிகளுக்கு ரூ.102.84 இலட்சமும், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் 102 பணிகளுக்கு ரூ.565.80 இலட்சமும், குதிரையாறு திட்டத்தின் கீழ் 3 பணிகளுக்கு 6.10 இலட்சமும் மற்றும் கீழ்பவானி திட்டத்தின் கீழ் 5 பணிகளுக்கு 45.80 இலட்சமும் என 157 பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.720.54 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 13.03.2017 அன்று உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்கலம் முத்து சமுத்திரம் பகிர்மானக் கால்வாயில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தற்போது குடிமராமத்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், குடிமராமத்துப் பணிகள் மூலம் முட்புதர்கள் மற்றும் சீமைக் கருவேலான் மரங்ளை வேருடன் அகற்றுதல், கால்வாயில் வண்டல் மண் தேங்கியுள்ள இடங்களில் தூர்வாருதல் கால்வாயின் கரைகளில் பலவீனமாக உள்ள இடங்களில் மண்கொட்டி அகலப் படுத்தி, கரைகளை பலப்படுத்துதல், பழுதடைந்த குறுக்கு கட்டுமான கட்டிடங்கள் புதுப்பித்தல், கரைகள் பலவீனமாக உள்ள இடங்களில் முக்கியமானப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகியவை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளால் சீமைக்கருவேலான் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு தூர்வாரப்படுவதன் மூலம் தண்ணீர் தங்கு தடையின்றியும் கரைகள் பலப்படுத்தப்படவுள்ளது. மற்றும் தடுப்புச் சுவர் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட உடையார்குளத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் 87.36 ஏக்கர் நிலங்களும் மற்றும் நல்லாம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட குமாரபாளையத்தில் நல்லதங்காள் ஓடை கிளைக்கால்வாய் குடிமராமத்து பணிகள் மூலம் 4744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகள் பெற முடியும். இவ்வாறு குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 4,15,775 ஏக்கர் பாசனப் பகுதிகள் பயணடையும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, எலுகாம்வலசு நல்லதங்காள் ஓடை நீர்த் தேக்க பரப்புகளில் சுமார் 102 ஏக்கர் பரப்பளவில் அகற்றப்பட்டிருந்த சீமைக்கருவேல மரங்களையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வின் போது, அமராவதி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மு.கொளந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொ) மைக்கேல, உதவி செயற்பொறியாளர் அசோக்பாபு, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொது மக்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கலெக்டர்களுடன் ஆலோசனை
23 Apr 2024சென்னை, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று 12 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளில் நாட்டில் வெப்ப அலை நிலவாது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சென்னை ஏரிகளில் நீர் இருப்பு பாதியாக சரிவு
23 Apr 2024சென்னை, கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.