முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டு அருகே ஸ்ரீஅம்மன் ஆங்கிலப்பள்ளியில் 23வது ஆண்டு விழா!

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள ஜி.தும்மலப்பட்டியில் உள்ள ஸ்ரீஅம்மன் நர்சரி மற்றும் பிரைமரி ஆங்கிலப்பள்ளியில் 23வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார். நாகர்கோவில் வருமானவரித்துறை துணை ஆணையாளர் சாந்தசுருபன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அய்யம்பாளையம் சக்தி டிரஸ்ட் நிறுவனர் சக்திஜோதி, நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் லெட்சுமி, வத்தலக்குண்டு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் எஸ்தர்ராஜம், கல்லுப்பட்டி மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணியம், வத்தலக்குண்டு கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அங்கயற்கன்னி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
 விழாவில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. 23வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 23வகையான கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 123 மாணவர் மாணவிகளுக்கு சாதனை பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளியின் தாளாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்