எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டுள்ளதையொட்டி அங்கு பிரசாரம் களைகட்டத்தொடங்கியுள்ளது. இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. அம்மா என்ற ஒரு பெயரிலும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா என்ற மற்றொரு பெயரிலும் இரு அணிகள் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பாக டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பாக மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. சார்பாக மருது கணேஷ், தே.மு.தி.க. சார்பாக மதிவாணனும், மக்கள் நல கூட்டணி சார்பாக ஒற்றுமை இல்லாததால் இடது கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மட்டும் லோகநாதனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர ஜெ.தீபா பேரவை சார்பாக தீபாவும் பாரதிய ஜனதா சார்பாக கங்கை அமரனும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை சார்பாகவும் போட்டியிடுகிறார்கள்.
வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி
ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனுத்தாக்கலும் வேட்புமனு பரிசீலனையும் முடிந்துவிட்டது. மொத்தம் 82 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனு வாபஸ் வாங்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணிக்கு களத்தில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். போட்டியிடும் வேட்பாளர்கள் 64 பேருக்கும் மேலாக இருந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறைதான் வாக்குப்பதிவின்போது பயன்படுத்த முடியும். 64 வேட்பாளர்களுக்கும் குறைவாக இருந்தால் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு பயன்படுத்தப்படும்பட்சத்தில் தாம் வாக்களித்த வாக்கு விரும்பிய வேட்பாளருக்கு கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு சீட்டு வழங்க இந்த தேர்தலில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு மற்றும் திரித்தம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரையொட்டி இந்த புதிய முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
தலைவர்கள் முற்றுகை
இந்தநிலையில் ஆர்.கே. நகரில் அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிடத்தொடங்கிவிட்டனர். இதனையொட்டி பிரசாரம் களை கட்டத்தொடங்கிவிட்டது. இந்த தொகுதியில் 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா, தி.மு.க., இடது கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., பாரதிய ஜனதா,ஜெ.தீபா பேரவை ஆகிய கட்சிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிலும் அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா, தி.மு.க. ஆகிய கட்சிகளுடையே மிகக்கடுமையான போட்டி நிலவிகிறது.
வீடு வீடாக பிரச்சாரம்
ஆர்.கே. நகரில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தெருத்தெருவாக பிரசாரம் செய்வதோடு வீடு வீடாகவும் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் குவிந்தவண்ணம் வருகிறார்கள். இதனால் தொகுதியில் பிரசாரம் களைகட்டத்தொடங்கியுள்ளது.
தினகரன்:-
அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக டி.டி.வி. தினகரன் கடந்த 23-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டார். அவரது வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்தவுடனேயே அவர் வீதி, வீதியாக பிரசாரம் செய்யத்தொடங்கிவிட்டார். அதோடுமட்டுமல்லாது அவர் சார்பாக 200-க்கும் மேற்பட்டவர்கள் பிரசார பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதோடு அவர்கள் குழுக்களாக பிரிந்து அவருக்கு பிரசாரத்திற்கான உதவிகளை செய்து வருவதோடு அவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொகுதி முழுக்க இவர்கள்தான் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.
மதுசூதனன்:-
அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா சார்பாக போட்டியிடும் மதுசூதனன் ஆதரவாளர்களும் பிரசாரத்தை நேற்று தொடங்கிவிட்டனர். வண்ணாரப்பேட்டையில் தேர்தல் பிரசார பணிமனைக்கான பூமிபூஜையை ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கிவைத்தார். தண்டையார் பேட்டையில் உள்ள நாடரான் தோட்டத்தில் முதல் தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்தினர். இதில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை, ம.பா.பாண்டியராஜன் உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். ஏற்கனவே தொகுதி முழுவதும் உள்ள முக்கிய தலைவர்களை மதுசூதனன் சந்தித்து பேசி தனக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இன்று முதல் அவர் தனது அணியின் மூத்த தலைவர்களுடன் தெரு தெருவாகச் சென்று பிரசாரம் செய்கிறார். மதுசூதனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
மருதுகணேஷ்:
தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் மருதுகணேஷ் அந்த தொகுதியை சேர்ந்தவராக இருப்பதால் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனே தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தொகுதியில் உள்ள முக்கிய பெரியோர்களை சந்தித்து அவர்களிடம் ஆசிபெற்று பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க. நிர்வாகிகளும் அவரது ஆதரவாளர்களும் நாளை முதல் தொகுதி முழுவதும் சென்று பிரசாரம் செய்ய தயாராகி வருகிறார்கள். நாளை தி.மு.க. வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மருதுகணேஷை அறிமுகம் செய்துவைத்து பேசுகிறார். அந்த கூட்டத்தில் தி.மு.க.வின் இதர தலைவர்களும் கலந்துகொண்டு பேசுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் சுப.வீரபாண்டியன், எர்ணாவூர் நாராயணன், பொன்குமார், எஸ்றா சற்குணம், செல்லமுத்து, திருப்பூர் அல்தாப், பார்வர்டு பிளாக் அம்மாவாசி, கதிரவன், அதியமான் ஆகியோரும் மருதுகணேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்கள்.
கங்கை அமரன்:
பாரதிய ஜனதா சார்பாக போட்டியிடும் கங்கை அமரன் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை செளந்தராசன் பிரசாரம் செய்து வருகிறார். இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு ஆதரவாக பா.ஜ.கட்சியின் இதர தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இடதுகம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதனுக்கு ஆதரவாக அந்தக்கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நாம் தமிழர், தே.மு.தி.க. கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீபா:
ஜெ.தீபா பேரவை சார்பாக போட்டியிடும் தீபா தனது பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். இன்றுமாலை தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் தெருவில் இருந்து தீபா பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.
ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், ஆதரவாளர்களும் குவிந்து வருவதால் பிரசாரம் களைகட்டத்தொடங்கிவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.