முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஓட்டு வேட்டை

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க ( அம்மா) வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்,

அமைச்சர் வாக்குசேகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க ( அம்மா) வேட்பாளர் .டி.டி.வி.தினகரனை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சரும் அம்மா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் , அங்குள்ள வ.உ.சி நகரில் நேற்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார், வ. உ.சி நகர் சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அமைச்சர் உதயகுமார், வீடுவீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி, வாக்குசேகரிப்பை தொடங்கினார்.
 காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடமும் அமைச்சர் உதயகுமார் வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை

மக்களால் நான்: மக்களுக்காக நான் என்று தவ வாழ்வு வாழ்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க திட்டமிட்டார், இந்தியாவிலேயே முதன்மை தொகுதியாக்கும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தார். அந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் அதிமுக ( அம்மா ) துணை பொதுசெயலாளரும் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையுமான டிடி.வி.தினகரன் போட்டியிடுகிறார், அவர் பெரியகுளம் தொகுதியில் அரசியல் பாரபட்சமின்றி நல்ல பல காரியங்களை ஆற்றியுள்ளார், சாதிசமய வேறுபாடின்றி மக்களுக்கு பணியாற்றிய சேவகராக போற்றப்படுகிறார்.

50 ஆயிரம் வாக்குகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும்வகையில் இந்தியாவின் முன்னோடி தொகுதியாக ஆர்.கே.நகரை உருவாக்க டி.டி.தினகரனை வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக தாய்மார்கள் இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பெரும் திரளாக வந்திருக்கிறார்கள். டி.டி.வி.தினகரனை வெற்றிபெற செய்வதற்காக கடும் வெயிலிலும் இங்கே மக்கள் வெள்ளமென திரண்டு வந்திருக்கிறார்கள் . மக்கள் ஆர்வத்தின் அடிப்படை.யில் பார்த்தால் வித்தியாசத்தில் நம் துணை பொதுசெயலாளர் தினகரன், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கும், ஆர்.கே.நகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதற்கும் அரிய பல திட்டங்களை தந்திருக்கிறார்,. அந்த திட்டங்களை மக்களிடம் வீடு வீடாக திண்ணை பிரசாரமாக தெரிவித்து வருகிறோம், முதல்வர் அம்மாவின் சாதனைகள் தொடர வாக்குகளை சேகரித்து வருகிறோம்,. அந்த சாதனைகள் தொடர ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தினகரனுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்,. இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அமைச்சர் உதயகுமார் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி :ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா பெயரை சொல்லி வாக்கு கேட்க முடியுமா என்று மதுசூதனன் கேட்டிருக்கிறாரே?

பதில் :அவர்கள் விளம்பரத்திற்காக எதையாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள்,

கேள்வி :இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் தொப்பி சின்னம் வெற்றி தேடி தரும் என்று நம்புகிறீர்களா

பதில் :ஆளுங்கட்சியின் சாதனைகள் தொடர வேண்டுமானால் அதிமுக துணை பொதுசெயலாளர் தினகரன் வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது தான் மக்களுக்கான திட்டங்கள் செய்ய முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள், ஆளுங்கட்சியால் தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். வேறு யார் வந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை கொண்டு வர முடியாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், எனவே ஆர்.கே.நகரில் டி.டி.வி, தினகரன் வெற்றி உறுதியாகி விட்டது.

கேள்வி :நீங்கள் பணப்பட்டுவாடா நடத்தி வருவதாக எதிர் வேட்பாளர் குற்றம்சாட்டியுள்ளாரே?

பதில் :இதே குற்றச்சாட்டை தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இடைத்தேர்தலில் போட்டியிட்ட போதும் தெரிவித்தார்கள். இப்போதும் கூறுகிறார்கள். நீங்களே இந்த கூட்டத்தையும் பார்க்கிறீர்கள், எங்களையும் பார்க்கிறீர்கள்..தினகரனின் வெற்றி உறுதியாகி விட்டது. தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார், இந்த வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், மதுரை மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பகுதி பொருளாளர் முரளிமுருகன் மற்றும் வட்ட செயலாளர் வேலு ஆகி்யோர் கலந்து கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பின்போது ஏராளமான இளைஞர்கள்,. இளம்பெண்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்