முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி தலையிட்டு 38 மீனவர்கள்-133 படகுகளை விடுவிக்க செய்ய வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை,மார்ச்.27 இலங்கை கடற்படையினரால் இழுத்துச்செல்லப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 38 பேர்களையும் 133 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 6 மீனவர்களும் மற்றும் கோட்டைபட்டினத்தில் இருந்து 6 மீனவர்களும் தனித்தனியாக விசைப்படகுகளில் சென்று தமிழக கடல் பகுதியில் நேற்று அதிகாலையில் மீன்பிடித்துக்கொண்டியிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த 12 மீனவர்களையும் அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியோடு இலங்கைக்கு இழுத்துச்சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் கடந்த 17-ம் தேதி அன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுவை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினர். அதன் பின்னர் கடந்த 21-ம் தேதி தமிழக மீனவ பிரதிநிதிகள் டெல்லி சென்று சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண அவர் உறுதி அளித்தார். அதனால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மீனவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

இந்த நம்பிக்கையில் மண்விழும் வகையில் நேற்று அதிகாலையில் தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் கொண்ட இரண்டு குழுக்களை இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தியதோடு இழுத்துச்சென்று இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துகொண்டு சென்றுவிட்டனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் தமிழக மீனவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தார்கள் வாழ்க்கைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டியிருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் கோபத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நேற்றுஅதிகாலையில் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் ஏற்கனவே சிறையில் உள்ள 26 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 133 விசைப்படகுகளையும் விடுவிடுக்க வேண்டும். இந்த படகுகள் நீண்டகாலமாக இலங்கையின் பாதுகாப்பில் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அவைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. மேலும் காலதாமதம் ஏற்பட்டால் அந்த விசைப்படகுகள் பயன்படுத்த முடியாமல் போய்விடும். இதனால் மீனவர்களின் வாழ்க்கை அடியோடு நாசமாகி விடும். இதைத்தடுக்க தாங்கள் இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் தொடர்பு கொண்டு இனிமேல் இந்தமாதிரி சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடுமட்டுமல்லாது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு கோரியுள்ள 1650 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்தக்கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago