முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் வீடில்லா ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் : டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் அறிவிப்பு

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

 சென்னை - சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில், வீடில்லா ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ள அதிமுக அம்மா வேட்பாளர்  டிடிவி தினகரன், இத்தொகுதியை இந்தியாவின் முன்னோடி தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார். சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று  டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் தொகுதியில் அமைச்சர்கள், மக்களை சந்தித்து, துறைரீதியான அவர்களின் குறைகளை குறித்துக் கொண்டு, அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்வதாகவும்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்