முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளச்சாராயம் ஒழிப்பு - மது உபயோகித்தலுக்கெதிரான விழிப்புணர்வு பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      தேனி
Image Unavailable

தேனி.மார்ச்.28
  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்டகலெக்டர்வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டகலெக்டர்அவர்கள் பொதுமக்களிடமிருந்து 182 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்டகலெக்டர்அவர்கள் கேட்டுக்கொண்டார்.

     இக்கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள பெரியகுளம், உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கி டையே நடைபெற்ற கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் மது உபயோகித்தலுக்கெதிரான விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும், கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற வினாடி – வினா போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.19,895- மதிப்பிலான வங்கி கடன் வட்டி மானியத்தொகையினையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3,000- வீதம் ரூ.6,000- பார்வையிழந்தோர் நிதியுதவியினையும் மாவட்டகலெக்டர் வெங்கடாசலம், வழங்கினார்.

      இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) (பொறுப்பு) கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரசேகரன் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிலிங்கம் முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயக்குமார் மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.கிருஷ்ணவேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்