முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.டி.வி தினகரன் போட்டியிடும் ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணிமனை : அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - .அ.தி.மு.க அம்மா வேட்பாளர்  டிடிவி தினகரன் போட்டியிடும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் . கே. ஏ. செங்கோட்டையன், இந்த பணிமனையை திறந்து வைத்தார்.    சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், இத்தொகுதிக்கு உட்பட்ட 38-வது வட்டத்தில் அமைந்துள்ள வைத்தியநாதன் பாலம் அருகே, தேர்தல் பணிமனையை, அமைச்சர் . கே. ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

செல்லூர் கே. ராஜூ, . எம்.சி. சம்பத்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க அம்மா வேட்பாளர் . டிடிவி தினகரன், மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்றும், மாண்புமிகு அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களும்முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.  பணிமனை திறப்பு விழாவில், அமைச்சர்கள் . செல்லூர் கே. ராஜூ, . எம்.சி. சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்.பி. உதயகுமார், . ஜி. பாஸ்கரன் 

40-வது வட்டத்திற்கு உட்பட்ட வ.உ.சி. நகர், மங்கம்மாள் தோட்டம், செல்லியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகளின் பூத் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் . ஆர்.பி. உதயகுமார், . ஜி. பாஸ்கரன் மற்றும் கழக அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் . கமலக்கண்ணன் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

சேவூர் எஸ். ராமச்சந்திரன்

இந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் . சேவூர் எஸ். ராமச்சந்திரன், இத்தொகுதிக்கு உட்பட்ட இளையமுதலி தெருவில் இருக்கும் அருள்மிகு நாகாத்தம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், அ.தி.மு.க அம்மா வேட்பாளர் . டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பிரசுரங்களை வழங்கி, தொப்பி சின்னத்தில் போட்டியிடும் . டிடிவி தினகரனை அமோக வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பா.வளர்மதி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மேயர் பாசுதேவ தெருவில் வசிக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கழக இலக்கிய அணி செயலாளரும், செய்தித்தொடர்பாளருமான  பா.வளர்மதி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் . தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் செய்த துரோகம் குறித்து எடுத்துரைத்தார்.

ஆர்.கே. நகர் தொகுதியில், . டிடிவி தினகரனுக்கு ஆதரவு திரட்டிய . சிங்கமுத்து, மாண்புமிகு அம்மாவின் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு, தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இப்பிரச்சாரத்தின்போது, அமைச்சர்கள் . உடுமலை கே. ராதாகிருஷ்ணன், . R.B. உதயகுமார்,உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

இதனிடையே, 47-வது வட்டத்திற்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் உள்ள 232 முதல் 235 வரையிலான 4 வாக்கு சாவடிகளுக்கு உட்பட்ட மக்களை திரட்டி, திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தொப்பி சின்னத்தில் போட்டியிடும் . டிடிவி தினகரனை, அமோக வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த திண்ணைப் பிரச்சாரத்தில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்