முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீhக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில் நடைபெற்றது.

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன்,  குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து  மொத்தம்  321  மனுக்கள்  வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர்  பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட  உத்தரவிட்டார்.

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில்  முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள்,  அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்,  மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத் தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்  ஆய்வு மேற்கொண்டார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் விருப்ப கொடை நிதியிலிருந்து 3 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000/-, ஒரு பயனாளிக்கு சிறு தொழில் செய்ய உதவித்தொகையாக ரூ.10,000/-, ஒரு பயனாளிக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூ.10,000/- என 5 பயனாளிகளுக்கு ரூ.50,000/-க்கான ஆணையினை  மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) (பொ) திருமதி.தேவிகாராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியம் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்