முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் மனுக்களை வாங்கினார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடனுதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 117 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார்.

அத்துடன் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பொ.சங்கர் அறிவுறுத்தினார்

இக்கூட்டத்தில் துணை கலெக்டர் (மனுக்கள்) பரமசிவம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜூவரத்தினம், உதவி ஆணையர்(கலால்) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப்பாட்ஷா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்