எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகிரி மார்ச் 28 -ஈரோடு மாவட்டம் சிவகிரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொதுக்கிணற்றை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தூர் வாரினார்கள். கடும் வறட்சியிலும் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது.கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் தற்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் வறட்சி நிலவுகிறது. அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டது. இதனால் மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வற்றாத ஜீவநதிகள் மணல் பரப்புகளாக கானல் நீரை கக்கி கொண்டிருக்கின்றன.தண்ணீரின்றி விவசாயம் முற்றிலும் முடங்கி விட்டது. பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இடமாக அலைகிறார்கள். அதுவும் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். 1000 அடி, 2 ஆயிரம் அடி என ஆயிரக்கணக்கான அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டும் தண்ணீருக்கு பதிலாக வெறும் காற்றுத்தான் வருகிறது. கடும் வறட்சியிலும் 25 அடியிலேயே கிணற்றில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது என்றால் ஆச்சரியம் அல்லவா. இந்த ஆச்சரிய சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்து உள்ளது.
100 ஆண்டுகள்
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் புதிய பஸ் நிலையம் அருகே குமரன் தெருவில் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்கு நந்தவன கிணறு என்ற பெயரும் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிணறுதான் அந்த ஊர் மக்களுக்கு தண்ணீரை வழங்கி வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்கள் அந்த கிணற்றை குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். பின்னர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வீதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து இந்த கிணற்றின் பயன்பாடு குறைய தொடங்கியது. இதனால் கிணற்றை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தன. அடர்ந்த முட்புதர்கள் உருவாகின. இதனால் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததுடன், குப்பைகளும் கிணற்றில் விழுந்தன. இதன்காரணமாக கிணறு தனது பொழிவை இழந்தது. இதனால் 60 அடி ஆழமுள்ள கிணறு 20 அடி ஆழமுள்ள கிணறாக மாறியது. பின்னர் இந்த கிணற்றை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. எனினும் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது.
. 30 ஆண்டுகளுக்கு முன்பு
தற்போது சிவகிரி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்க வில்லை. அப்போதுதான் அங்குள்ள இளைஞர்களுக்கு ஊரில் உள்ள நந்தவன கிணறு நினைவுக்கு வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சிவகிரியில் உள்ள அனைவருக்கும் தண்ணீர் வழங்கிய அந்த கிணற்றை தூர் வாரினால் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இளைஞர்களுக்கு துளிர்த்ததுஇந்த நம்பிக்கையை செயல்படுத்த இளைஞர்கள் எண்ணினார்கள். இந்த பணியை சிவகிரியில் உள்ள சுதந்திர சிறகுகள் என்ற அமைப்பு முன்னெடுத்து சென்றது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் முதலில் பொதுக்கிணற்றை சுற்றி உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அகற்ற தொடங்கினர். தினமும் 10 இளைஞர்கள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
தண்ணீர் ஊற்றெடுத்தது
இந்த பணியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும் ஈடுபட்டனர். மேலும் இளைஞர்களுக்கு தேவையான உணவு, குளிர்பானம், டீ போன்றவற்றையும் பொதுமக்கள் வழங்கினார்கள். கிண்றை சுற்றிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள் போன்றவற்றை அகற்றிய பிறகு கிணற்றில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றியபோது அதில் தண்ணீர் ஊற்றெடுக்க தொடங்கியது. இதை கண்டதும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் தங்களுடைய நம்பிக்கையை இழக்காமல் குப்பை மற்றும் அங்கிருந்த சகதியை தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது 5 அடி ஆழத்துக்கு தூர்வாரப்பட்டு உள்ளது. கிணற்றில் இருந்து தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து வருகிறது. அதாவது கிணற்றின் மேல் மட்டத்தில் இருந்து 25 அடி ஆழத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆயிரக்கணக்கான அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் வராமல் உள்ள இந்த வறட்சியில் 25 அடி ஆழத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து உள்ளது அந்த பகுதி பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்து உள்ளது.
பாராட்டு
தண்ணீர் ஊற்று அதிகமாக இருந்ததை தொடர்ந்து அதில் இருந்த தண்ணீர் ‘ஆயில் என்ஜின்’ மூலம் உறிஞ்சிப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிவகிரி பகுதி இளைஞர்கள் கிணற்றை தூர்வாரும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கிணற்றில் இருந்து ஊறும் தண்ணீர் மாசுபட்டு உள்ளது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கோடை காலம் நெருங்க உள்ளது. எனவே கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பேரூராட்சி நிர்வாகம் இந்த கிணற்றை தூர் வாரி நீர் மேலாண்மை செய்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும்’, என்றனர். இளைஞர்களின் இந்த முயற்சியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.