முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் திண்டுக்கல் பள்ளி மாணவி சாதனை

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல், -தென்னிந்திய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் சேம்பியன்ஷிப் போட்டிகள் பாண்டிச்சேரியில் செஞ்சுரி அகாடமிக் சார்பில் பி.எஸ்.சி. பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக அணி சார்பில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6ம் வகுப்பு மாணவி விதுலாஸ்ரீ இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு போட்டிகளிலும் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வருகின்ற மே மாதம் 22, 23, 24 ஆகிய தேதிகளில் இலங்கையில் 5 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய போட்டியில் கலந்து கொள்ள மாணவி வாய்ப்பு பெற்றுள்ளார். மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த 4ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் சூரிய பிரனேஷ்வர் தென்னிந்திய அளவில் 3ம் இடம் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற சாதனை படைத்த மாணவர்கள் பள்ளி தாளாளர் எஸ்.பி.டி.கனகசபை மற்றும் முதல்வர் ஆக்னஸ் ரீட்டா மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்