முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் கென்ய படைகள் தாக்குதல்: 31 தீவிரவாதிகள் பலி

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

கென்ய  - சோமாலியாவில் கென்ய படைகள் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கென்ய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சோமாலியாவின் பதாதி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கென்ய படைகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் கென்ய அரசின் இந்தத் தாக்குதல் குறித்து அல் ஷபாப் அமைப்பு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. கென்யா மீதான அல் ஷபாப் தீவிரவாத அமைப்பின் தொடர் தாக்குதல் காரணமாக 2011-ம் ஆண்டு கென்யா தனது படைகளை சோமாலியாவுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தி வருவது. கென்யா, சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து சதி செயல்களில் ஈடுபட்டு வரும் அல் ஷபாப் அமைப்பு அல் காய்தா இயக்கத்தின் கிளை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

7 யூனிசெப் பணியாளர்கள் பலி:
ஆப்பிரிக்க நாடான சூடானில் நடக்கும் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் யூனிசெப் அமைப்பின் உதவி பணியாளர்கள் 7 பேர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்