முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை ஊசி போட்ட 3 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தூத்துக்குடி

 

திருச்செந்தூரில் மாணவர்களுக்கு போதை ஊசி போட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.திருச்செந்தூர் பகுதியில் மாணவர்களுக்கு போதை ஊசி போட்டு வருவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், திருக்கோவில் காவல் ஆய்வாளர் பெரி.லெட்சுமணன், காவல் உதவி ஆய்வாளர்கள் இராஜகுமாரி, சிந்தாமணி உள்ளிட்ட காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் திருச்செந்தூர், வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த மாசானக் கோனார் மகன் இசக்கிமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநருடைய வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இசக்கிமுத்து (36), வீரமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (எ) சேலம் மணி (22) மற்றும் மெஞ்ஞானபுரம், சத்யா நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் புஷ்பராஜ் (எ) செல்வம் (36) ஆகியோர் மாணவர்களுக்கு போதை ஊசி போட்டு வந்தது தெரியவந்தது. இசக்கிமுத்து வீட்டில் இருந்து போதை மருந்து, வாந்தி வராமல் இருப்பதற்கான மருந்து, 124 சிரிஞ்ச் மற்றும் 820 நீடில்ஸ் ஆகியவற்றினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.வுpசாரணையில், இசக்கிமுத்து மருந்துக்கடைகளில் வயிற்றுவலி, உடல் வலி எனக்கூறி போதைக்கு பயன்படும் மருந்துகளை வாங்கி சேமித்து வைப்பாராம். அதன்பின்னர் அவனது கூட்டாளிகளான மணிகண்டன் மற்றும் புஷ்பராஜ் ஆகியோர் போதை ஊசி போடுவதற்காக அழைத்து வருவார்களாம். அவர்களிடம் இசக்கிமுத்து, ரூ. 200 பெற்றுக்கொண்டு, ஊசி போடுவாராம்;. அழைத்து வருபவர்களுக்கு ஒரு ஊசிக்கு ரூ. 50 என கமிஷன் கொடுப்பாராம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்