எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 58 பணிகள் ரூ.4 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன என செய்தியாளர்கள் சுற்றுப் பயணத்தில் பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பயணம்
திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் மணச்சநல்லூர் வட்டம், சாந்தப்பாடி பெருவளைவாய்க்கால், இலால்குடி வட்டம், பூவாளுர் கிராமத்திற்குட்பட்ட மாதானம் ஏரியில் வழங்குவாய்க்கால் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்ததாவது:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியினை எதிர்கொள்ளவும், மழை நீரை திறம்பட சேமித்தும், புதிய நீர்வள ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் மற்றம்; கால்வாய்களில் களைகள், முட்செடிகள் மற்றும் அடர்ந்த சிறு செடிகளை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், வரத்துவாய்க்கால், கால்வாய்கள் மற்றும் ஏரி மதகுகளில் படிந்துள்ள மண்படிமானங்களை நீக்குதல், மழை மற்றும் கால்நடைகளால் ஏற்பட்ட மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள், குறுக்கு கட்டுமான அமைப்புகள் ஆகியவற்றைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வரும் நிதியாண்டுகளில் குடிமராமத்துப் பணிகள் நபார்டு நிதியதவியுடன் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாசன கட்டமைப்புகளான மதகுகள், மிகை நீர் கலிங்குகள், குறுக்கு கட்டுமான அமைப்புகள் ஆகியவற்றை மறுகட்டுமானம் செய்தல், ஏரிகளை தூர்வாரி அதன் முழு கொள்ளளவை மீட்டெடுத்தல், ஏரிக்கரைகளைப் பலப்படுத்துதல், தரப்படுத்துதல் ஆகிய பெரும்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் ஒரு பகுதியாக முதற்கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்க குடிமராமத்து திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 30 மாவட்டங்களில் 1519 பணிகள் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரியாறு வடிநில கோட்டத்தின் சார்பில் 58 பணிகள் 4 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாருதல் வழங்குவாய்க்கால் தூர்வாருதல், ஏரிக்கரை பலப்படுத்துதல், மடை பராமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள், கலிங்கு பாரமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள், மதகு பாரமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள் ஆகிய பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் 27.75 இலட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், திருவெறும்பூர் வட்டத்தில் 19.80 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், இலால்குடி வட்டத்தில் 19.85 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், துறையூர் வட்டத்தில் 76.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 9.2 இலட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், முசிறி வட்டத்தில் 27.50 இலட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், மற்றும் மணப்பாறை வட்டத்தில் 44.4 இலட்சம் மதிப்பீட்டில் 5 பணிகளும் செயலாக்கத்தில் உள்ளது. இப்பணிகளில் 10 பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. எஞ்சியுள்ள பணிகள் வரும் மே – 2017இல் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மாடக்குடி, சாந்தப்பாடி வாளக்குறிச்சி கிராமம், பழைய பெருவளை வாய்க்கால் மைல் 0,0 முதல் 1,2 வரை உள்ள பிரிவு வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ.5.50 இலட்சங்கள் மதிப்பீட்டில் பணிகள் துவங்;கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலணை அகண்ட காவிரியில் இடது கரையிலிருந்து பெருவளை வாய்க்கால் பிரிகின்றது. பெருவளை வாய்க்கால் மைல் 13,1 பழைய பெருவளை வாய்க்கால் பிரிகின்றது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 4.00 கி.மீ ஆகும். இவ்வாய்க்கால் ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு, மேலணையின் பாராமரிப்பில் உள்ளது.
பெருவளை வாய்க்கால் மைல் 15.4-ல் இரத்தனக்குடி அணைக்கட்டிலிருந்து கீழ்பெருவளை வாய்க்கால் பிரிகிறது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 14.80கி.மீ ஆகும். கீழ்பெருவளை வாய்க்கால் மைல் 5.6 ல் மாதானம் ஏரி வாய்க்கால் பிரிகிறது. கீழ்பெருவளை வாய்க்கால் வலது கரை மைல் 5,2ல் பிரியும் பல்லவரம் பெரிய மதகு வாய்க்கால் மூலம் 614.13 ஏக்கர் நிலங்களும், வலது கரை மைல் 5,6ல் பிரியும் மாதானம் வழங்கு வாய்க்கால் மூலம் 208.43 ஏக்கர் நிலங்களும், எல்லையம்மன் கோவில் வழங்கு வாய்க்கால் மூலம் 25.03 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. இவ்வாய்க்கால் மூலம் திருமணமேடு, தண்டங்கோரை, பம்பரம்சுத்தி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றது.
இவ்வாய்க்கால்களில் கடந்த காலங்களில் பெய்த மழையினாலும், வெள்ளத்தினாலும் வடிகால் கரையில் உள்ள மண் அடித்து சென்று வடிகால் மேடிட்டு மண்திட்டுகள் மற்றும் ஆங்காங்கே காட்டாமணக்கு செடிகள், அல்லிக்கொடிகள் படர்ந்து நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ளன. இதனால் நீர்த்தேக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள பாசன நிலங்களை மூழ்கடித்து சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனை சீரமைக்க இப்பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது இலால்குடி ஆற்றுப் பாதுகாப்பு உபகோட்ட உதவிப் செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேஷ், மேலணை, ஆற்றுப்பாதுகாப்பு பிரிவு இளம் பொறியாளர் சு.தனசேகர், இலால்குடி ஆற்றுப்பாதுகாப்பு பிரிவு, உதவி பொறியாளர் த.தர்மலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.