முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேட்டில் சோதனை: வரி கட்டாத 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      சென்னை

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையில் நடத்திய சோதனையில் வரி கட்டாத 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திடீர் சோதனை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜா மணி, ஈஸ்வரன், ஜெய் கணேஷ், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில் 4 ஆம்னி பஸ்கள் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது.அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆம்னி பஸ்சும், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஆம்னி பஸ்சும், புதுச்சேரியைச் சேர்ந்த 2 ஆம்னி பஸ்களும் அனுமதி சீட்டு பெறாமலும், தகுதி சான்று புதுப்பிக்கப்படாமலும் இயக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த 4 பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஐ.சி.எப். போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.இதுகுறித்து அதிகாரி பழனிச்சாமி கூறுகையில், "அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி உள்ளிட்ட சில வரிகள் செலுத்திய பிறகு 4 ஆம்னி பஸ்களும் விடுவிக்கப்படும்" என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்