முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி நியூ எரா பள்ளியில் 28-வது ஆண்டு விழா

புதன்கிழமை, 29 மார்ச் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் பஹாய் சென்டர் மூலம் நடத்தப்பட்டு வரும்  நியூஎரா பள்ளியின் 28_வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பேரூஸ் தலைமை வகித்தார். விழாவில்

திருவண்ணாமலையைச் சேர்ந்த மை பர்ஸ்ட் பள்ளி முதல்வர் வீரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:_

பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்லொழுக்கத்துடன் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வசிக்கும் இடத்தையும், படிக்கும் பள்ளி போன்ற இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை போட்டு சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.

ஆண்டு விழா வினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழாவில் பஹாய் உள்ளூர் ஆத்மீக சபையின் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் வசந்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்