முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி நாள் விழா

புதன்கிழமை, 29 மார்ச் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி நாள் விழா நடைபெற்றது.

விளையாட்டுபோட்டிகள்

கல்லூரி முதல்வர் டாக்டர் பி.குகன் வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கை வாசித்தார்.ஜெயா கல்வி அறக்கட்டளை தலைவர் பேரா.அ.கனகராஜ் மாணவர்கள் கல்வி கற்கும் நாளில் மட்டும் போற்றக்கூடியவர்களாக அமைந்துவிடக்கூடாது.சமூக வாழ்வில் தான் பெரிய அளவில் போற்றக்கூடிய அளவில் தன் வாழ்வை வாழ்ந்து காட்ட வேண்டும்.சிறந்த தொழில்நுட்பத்தை உலகிற்கு தர முயலவேண்டும் என தலைமையுரையாற்றினார்..ஜெயா கல்வி அறக்கட்டளை செயலாளர் கே.விஜயகுமாரி,துணை தலைவர் கே.நவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இந்துஜா குரூப் நிறுவனத்தின் அசோக் லேலாண்ட் நிறுவன இயக்குனர் எம்.கஜேந்திரன் கிராமப்புற மாணவர்கள் பல் திறன் கொண்டவர்கள். பேச்சுத்திறனை வளர்த்துக் கொண்டால் மிக பெரிய வெற்றிகளை பெறலாம் என சிறப்புரையாற்றினார்.பேச்சாளர் அன்னபாரதி நகைச்சுவையும்,வாழ்வின் மேம்பாடும் என்ற தலைப்பில் பேசினார்.பல்கலை அளவிலும்,வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும்,சான்றிதழ்களும்,பரிசுகளும் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி.விஜயகுமார்,பிற கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.விழாவில் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்