முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடுமாவட்டத்தில் 5 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      ஈரோடு

தமிழகம்  முழுவதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வரும் 73 பேர், டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் ஈரோடு  மாவட்டத்தில் 5 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.  அதன்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும்  தனராஜ், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், ஈரோடு  சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஈரோடு டவுன் டிஎஸ்பியாகவும், ஈரோடு  மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் நாகப்பட்டினம்  மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை டிஎஸ்பியாகவும், அம்மாபேட்டை  இன்ஸ்பெக்டர் சுப்பையா தர்மபுரி மாவட்ட குற்ற ஆவண பதிவுக்கூட  டிஎஸ்பியாகவும், ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும்  ராஜேஷ், லஞ்ச ஒழிப்பு மற்றும் புலனாய்வுத்துறை டிஎஸ்பியாகவும் பதவி உயர்வு  பெற்றனர்.  இதேபோல கிருஷ்ணகிரி அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் பதவி  உயர்வு பெற்று ஈரோடு சிறப்பு இலக்குப்படை டிஎஸ்பியாகவும், சேலம் கியூ  பிராஞ்ச் இன்பெக்டர் சண்முகம் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோல தற்போது பெருந்துறை டிஎஸ்பியாக  பணிபுரிந்து வரும் பாஸ்கரன், கோவை கிழக்கு மாநகர உதவி ஆணையாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். பெருந்துறை டிஎஸ்பியாக கோவை மாவட்ட குற்ற ஆவண  பதிவுக்கூடத்தில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வரும் முருகன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்