முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாநகராட்சியில் 97 சதவீதம் வரிவசூல்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      ஈரோடு

நிதி ஆண்டு  இன்று நிறைவடைய உள்ள நிலையில் ஈரோடு மாநகராட்சியில் 97 சதவீத வரிவசூலை எட்டும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் தெரிவித்தார். இதுகுறித்து அவர்  கூறியதாவது

ஈரோடு மாநகராட்சியின் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, மொத்த வருவாய் வரவு ரூ. 497.47 கோடியாகும். இவற்றில் வருவாய் வரவினம் மூலம் ரூ. 101 கோடியும், மூலதன வரவினம் மூலம் ரூ. 396 கோடியும் மாநகராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது.வருவாய் வரவினங்களில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து வரிவிதிப்புகள் மூலமாக ரூ. 20 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படுகிறது. தொழில்வரி மூலமாக ரூ. 3.50 கோடியும், வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துகளின் மூலம் ரூ. 3.31 கோடி மற்றும் சொத்து வரி, குடிநீர் வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை மூலம் ரூ. 101 கோடி வருவாய் வசூல் செய்யப்படுகிறது. நிதியாண்டு  இன்று  நிறைவடையவுள்ள நிலையில், மாநகராட்சியின் சார்பில் வரிவசூல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

100 சதவீத அளவுவசூல்

நீண்ட காலமாக வரியினை பாக்கி வைத்துள்ள தனியார், அரசு நிறுவனங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வரிவசூல் செய்யும் பணியை அதிகாரிகள் விரைவுபடுத்தியுள்ளனர்.

  மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் செலுத்தத் தவறினால், கடைகளை மூடி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வரி வசூலே பிரதானமாக இருந்து வருகிறது. 100 சதவீத வரிவசூலை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு, கடந்த சில மாதங்களாக தீவிரமாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 97 சதவீத அளவுக்கு வரிவசூல் நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக குடிநீர் வரி, குத்தகை இனம் போன்றவை 100 சதவீத அளவுக்கு வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்து வரியில் 98 சதவீதம் வசூலாகியுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் வசூல் செய்த தொழில் வரியை செலுத்தாமல் உள்ளன. இதனை வசூல் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்