முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவிற்கு மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசன் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், தினசரி முத்துராமலிங்கதேவர் காய்கறி மார்கெட் தலைவருமான முத்துராஜ் மரக்கன்றுகளை நட்டினார், சண்முகவேல் முன்னிலை வகித்தார். புங்கை,வேம்பு, மகிலை, மாங்கன்று, பூஅரசமரன்று உட்பட ஐந்து வகை மரக்கன்றுகள் நடப்பட்டது. நகர்மன்ற உறுப்பினார் ஜோதிபாசு, பாட்டாளி மக்கள் கட்சி நகரத்தலைவர் மாரிமுத்து, அறக்கட்டளை பொருளாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் வழக்கறிஞர் வினோத்கண்ணன், மகேசு, பெருமாள், தங்கேஸ்வரன், ரகுமான், பேராச்சிபாலா மற்றும் பலர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் செய்திருந்தார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்