முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தின் ஐம்பெரும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      சென்னை

 

தமிழ்நாடு பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தின் ஐம்பெரும் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது.

 

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பணி ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 10ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை பாராட்டுதல், 10ஆம் வகுப்பு தேர்வில் பாடவாரியாக 100சதவீத தேர்ச்சியை தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு, 10ஆம் வகுப்பு தேர்வில் வட்ட அளவில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு ஆகிய ஐம்பெரும் விழாக்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது.

 

நிகழ்விற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க திருவள்ளூர் மாவட்ட தலைவர் வி.ஆர்.ஏழுமலை தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் பி.ஜவஹர் வரவேற்றார்.சென்னை பல்கலைக்கழக கல்வியல் துறை தலைவர் முனைவர் டி.குமரன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பாராட்டுரை வழங்கினார்.

 

மேலும் விழாவில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில சிறப்பு தலைவர் டி.சுப்பிரணியன், முன்னாள் மாநில தலைவர் எம்.சிதம்பர ஹரி, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் அ.கு.கங்காதர ரெட்டி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.தயாளன்,வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் எத்திராஜூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. விழா முடிவில் முன்னாள் தலைமை ஆசிரியர் கோ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்