முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தில் தமிழக அரசின் அம்மா திட்ட முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தில் தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது

நிலக்கோட்டை அருகில் உள்ள மைக்கோல்பாளையத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி வருவாய்த்துறை என்னும் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

நிலக்கோட்டை தாசில்தார் நிர்மலாகிரேஸ் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் தனு~;கோடி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை நிலக்கோட்டை யூனியன் முன்னாள் பெருந்தலைவர் யாகப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சமூக நல அலுவலர் கீதாரமணி, மைக்கேல்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்க தலைவர் ஜோசப் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். திட்ட தாசில்தார் சரவணன் ஆகியோர் அரசின் திட்டங்கள் குறித்தும், பயனாளிகள் பெறுவது எப்படி என்றும் விரிவாக பேசினார். வருவாய் துறை செயல்பாடுகள், பொதுமக்கள் பெறும் நன்மைகள் குறித்து பேசினார். 75க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்து முடிவில் நன்றி கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்