முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி ராஜா தலைமையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய காவல்துறை

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம். -ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீரங்ககவுண்டன்புதூர், குளத்துப்பகுதியில் புதர்போல காட்சியளித்த கருவேல மரங்களை ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக வேரோடு அகற்றியதை தொடர்ந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஒட்டன்சத்திரம் காவல்துறையினரை பாராட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்சதிரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஸ்ரீரங்ககவுண்டன்புதூரில் உயர்நீதிமன்ற உத்திரவின்படி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.சரவணன் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.ராஜா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் கோட்டைச்சாமி, ராஜேந்திரன், கோபாலகிரு~;ணன் ஆகியோர் முன்னிலையில் சீரங்கவுண்டன்புதூர் குளத்துப்பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வேரோடு அழித்தனர்.

இதில் டி.எஸ்.பி.ராஜா அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையத்திலிருந்து சார்பு ஆய்வாளர்கள், காவல்துறையினர் இப்பணியில் சிறப்பாக பணியாற்றினர். இதில் ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி செயலர் சி.ஈஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.ராஜா தலைமயில் புதர்போல காட்சியளித்த சீமைக்கருவேல மரங்களை வேரோடு அழிக்கும்; பணியில் சிறப்பாக பணியாற்றியதையடுத்து காவல்துறையினரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாரட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்