முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தினர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழியத்தின் டெல்லிகிளை சார்பில் அதன் நிர்வாகிகள் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தமிழகவிவசாயிகள்கடந்த21-நாட்களாக போராடிவருகிறார்கள்.இவர்களை தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின்நிறுவனர் மோகன் சி.லாச ரஸ் வேண்டுகோளின்படி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் டெல்லி கிளைசார்பில் அதன் நிர்வாகிகளான தனபால்ராஜ்,மோகன்தாஸ் தலைமையில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மேலும் விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணுவிடம் மோகன் சி.லாசரஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவினை தெரி வித்து சிறப்புபிரார்த்தனை செய்வதாகவும் தேவையான உணவு வசதிகளை செய்து தருவதாகவும்,கூறியதின் பேரில் அவரது ஆலோசனையின்படி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் டெல்லி கிளை சார்பாக தனபால்ராஜ், மோகன்தாஸ் மற்றும் குழுவினர் விவசாய பெருமக்களை சந்தித்து அவர்களுடைய அன்றாட தேவைகளை சந்திக்க நம்முடைய ஸ்தாபனத்தின் தலைவர் மோகன் லாசரஸ் வேண்டுகோளுக்கு இணங்க, குழுவினர் விவசாய பெருமக்களோடு சேர்ந்து 4 மணநேரம் அவர்களோடு இருந்தனர். மனபாரத்தோடு அவர்களுக்காக இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் ஜெபித்து விட்டு சென்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்