முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் துரித மின் இணைப்பு பெற ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் நிர்மல் ராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிட விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பத்தாரர் ஆதிதிராவிட விவசாயியாக இருக்க வேண்டும்.நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைப்பட்டிருக்க வேண்டும்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் விண்ணப்பித்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது விண்ணபத்தாரர் பற்றிய விவரங்களுடன் சாதி சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, வருமான சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச் சான்றுஃவாக்காளர் அட்டைபான் கார்டு.ஆதார் அட்டைஃமதிப்பெண் சான்று)இவற்றில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு விண்ணபத்தாரருக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா மற்றும் சிட்டா அடங்கல் நகல், "அ"பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைப்பட்டதற்கான நிலத்தின் வரைபடம் , சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது நகல் மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்