எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாநில அளவில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பயிலரங்கத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் , போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , அரசு முதன்மைச் செயலாளர் போக்குவரத்து ஆணையர் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தயானந்கட்டாரியா, மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, ஆகியோர் நேற்று(04.04.2017) தொடங்கி வைத்தனர்.
பேரணி
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையும் இணைந்து சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என 1200 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி இரயில்வே நிலையத்தை சென்றடைந்தது.
பேரணியில் பங்கேற்றவர்கள், பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘’தலைக்கவசம்! உயிர் கவசம்!, மித வேகம்! மிக நன்று! படியில் பயணம் நொடியில் மரணம்!! போன்ற பல்வேறு விளம்பர பதாகைகளை ஏந்திச் சென்றனர். தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி 300 பேர் இருச்சக்;கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநில அளவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொடர்ச்சியாக விபத்தில்லாமல் பேருந்து இயக்கியதில் முதல் இடம்பெற்ற ஓட்டுனர்கள் மற்றும் டீசல் சிக்கனத்தில் முதல் இடம் பெற்ற ஓட்டுநர்கள் 16 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினார்கள்
அமைச்சர் பேச்சு
அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கத்தை தொடங்கி வைத்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பேசியதாவது:
இந்தியாவில் சுமார் 50 இலட்சம் கிலோ மீட்டர் நீள சாலை உள்ளது. இதில் ஆண்டு தோறும் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்திலும் அதிக அளவு விபத்துகள் நடைபெறுகின்றன். இந்திய அளவில் தமிழகம் தான் சாலை விபத்தில் முதலிடம் வகிக்கிறது. ஆண்டு தோறும் இந்திய அளவில் ஏற்படும் விபத்தில், சுமார் 5 லட்சம் பேர் காயமடைகின்றனர். இதில் தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைகின்றனர்.
இந்தியாவில் கடந்தாண்டு நிகழ்ந்த விபத்தில் 1 இலட்சத்து 46 ஆயிரத்து 133 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 642 வாகன ஓட்டிகள் இறந்துள்ளனர். விபத்தால் ஏற்படும் மரணத்தில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது என்பது வேதனைக்குரிய தகவலாகும். சுமார் 72 சதவீத விபத்துகள் வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக ஏற்படுகிறது. விபத்தில் சிக்கி மரணமடைபவர்களில் 100க்கு 52 சதவீதம் பேர் இளைஞர்கள் தான்.
திருச்சி மாவட்டத்தில் 2016-2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த 562 விபத்துகளில் 583 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே வரும் காலங்களில் விபத்துக்களை குறைக்க நாம் உறுதி ஏற்போம். இவ்வாறு பேசினார்.
பாதுகாப்பு உறுதி
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதாவது:
இன்றைய கால கட்டத்தில் சாலை பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சாலை பாதுகாப்பு உறுதி செய்யப்பட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பிற்க்காக 2011 ஆம் ஆண்டு 15 கோடியாக வழங்கப்பட்ட நிதியினை அம்மா ரூபாய் 40 கோடியாகவும் பின்பு ரூபாய் 65 கோடியாகவும் உயர்த்தினார்கள். சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் மோட்டார் வாகன விதிகளின்கீழ்; 6 மாத காலத்திற்கு தற்காலிக தகுதி இழப்பும், மீண்டும் அத்தவறை செய்யும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக இரத்து ;செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இரத்து செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அம்மா முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியினை கடந்த காலங்களில் ரூபாய் 10 கோடியாக இருந்த நிதியினை ரூபாய் 60 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளார்கள். இந்நிதியிலிருந்து சாலை விபத்துகளில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூபாய் 1 இலட்சம் வழங்கப்படுகிறது. நிரந்தர ஊனம் மற்றும் கொடுங்காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒரு கண் அல்லது கால் இழந்தவர்களுக்கு ரூபாய் 30 ஆயிரமும் சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்பொழுது எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் விபத்துகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிராமப்புற நெடுஞ்சாலைகளில்தான் விபத்து அதிகம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர்களுக்கு சாலை விதிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் சாலை விதிமுறைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும். இவ்வாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் தேசிய சுகாதார நிறுவன இயக்குநர் டாக்டர்.தரேஸ் அகமது, சென்னை பெருநகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி,இ.கா.ப, மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.வரதராஜன், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ.அருண்,இ.கா.ப., திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) மயில்வாகனன், மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) பிரபாகரன்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்கள் டாமாலி கங்குலி, அருணாச்சலம், எம்.முருகேசன், சாந்தி, ஆர்.கிருஷ்ணாசாமி, பி.நிர்மலா, சுப்பையா, எஸ்.சந்திரசேகரன், பேராசிரியர்கள் மோசஸ், சாம்சன், குணசேகரன், சிறப்பு விருந்தினர்கள் டாக்டர்.கவிதாசன், பி.எஸ்.ஆனந்தராவ் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்கள், நிர்வாக மேலாளர்கள், இயங்கூர்தி ஆய்வாளர்கள,; பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.