முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தில் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது:மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தகவல்

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      சென்னை

திருவள்ளுர் மாவட்டத்தில் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் (ம) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக பணியிடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபட உள்ளது.

 

மீஞ்சூர் வட்டாரத்தில் (திருவொற்றியூர் பகுதி) - ஒரு கிராம ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்பபட உள்ளது.கிராம தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பேரிடர் அபாய மேலாண்மையில் பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். கடலோர பகுதிகளில் பேரிடர் அபாய மேலாண்மை சார்ந்த களப்பணியில் குறைந்தது 3 வருடம் அனுபவம் இருத்தல் வேண்டும்.

 

விண்ணப்பதாரரின் இருப்பிடம் சம்மந்தப்பட்ட வட்டாரம் அல்லது அருகாமையில் இருக்க வேண்டும். மக்களை ஒருங்கிணைக்ககூடிய திறன் சமுதாய வளர்ச்சி பணி மேற்கொள்ளும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும். இதற்கு ஒப்பந்த தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10000ஃ- வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக நியமனம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் கிராம தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் http://www.tiruvallur.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் விண்ணப்ப படிவம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இலவசமாக பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உரிய சான்று மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஏப்ரல் 15.04.2017 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தெரிவிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்