முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசரேத்தில் திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவி பலாத்காரம்: நகை தொழிலாளி கைது

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

நாசரேத்தில் திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு மிரட்டியதாக நகை தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் சமாதானபுரம் தெருவைச் சேர்ந்தவர் பேச்சியப்பன். பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது மனைவி ஜெயகுமாரி. பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் புன்னையடியில் உள்ள கோயிலில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் சுதா(19). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புன்னையடி நாககன்னியாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.  அப்போது இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சண்முகம் மகன் புதியகுமார்(24). நகைதொழிலாளி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதியகுமாருடன் சுதாவிற்கு காதல் மலர்ந்தது. இதனால் அடிக்கடி இருவரும் சந்தித்து காதலை வளர்ந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் தனிமையில் சந்தித்து கொண்டனர். இந்த விவகாரம் சுதாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதாவின் பெற்றோர்கள் நாககன்னியாபுரத்திலிருந்து நாசரேத் வெள்ளமடம் சமாதானபுரம் தெருவிற்கு வீடு மாறினர். ஆனாலும் சுதாவும், புதியகுமாரும் தங்களது தொடர்பை தொடர்ந்தனர். கடந்த 2ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் புதியகுமாரும், சுதாவும் இருந்தனர். அப்போது சுதாவின் பெரியம்மா இதை பார்த்துள்ளார். அப்போது சுதா காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த புதியகுமார் சுதாவையும், அவரது பெரியம்மாவை மிரட்டியுள்ளார். தன்னை புதியகுமார் ஏமாற்றியதை தொடர்ந்து சுதா திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி விசாரணை நடத்தி திருமண ஆசை வார்த்தை கூறி சுதாவை பலாத்காரம் செய்த புதியகுமாரை கைது செய்தார். அவர் வன்கொடுமை சட்டத்திலும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்