முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா.

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன், கோட்டைகருப்புசாமி உள்ளிட்ட 9 கோவில்களின் திருவிழா 3 நாட்கள் நடந்தது. இதில் முதல் நாள் 9 தெய்வங்களுக¢கு கனிமாற்றுதல் நிகழ்ச்சியும் பின்னர் இடையபட்டிக¢கு சென்று கணக்கப்பிள்ளை அழைத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அதேஊரிலிருந்து மேளதாளங்கள் முழங்க முத்தாலம்மன், அய்யனார் சுவாமி தீவட்டிபரிவாரங்களுடன் மற்றும் தெய்வங்கள் அழைத்துவரப்பட்டன. தொடர்ந்து பெட்டி பூசாரி அழைத்து வரப்பட்டு சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு சக்தி கிடாய் வெட்டப்பட்டது.

அரண்மனை பொங்கல் வைத்தல், முளைப்பாரி, மாவிளக¢கு தீட்சட்டி, உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை பக¢தர்கள் செலுத்தினர். 2&வது நாள் கிராமத்தின் சார்பாக பொங்கல் வைத்து கிடாய் வெட்டப்பட்டது. அன்று மாலையில்  அனைத்து பரிவாரங்களுடன் முத்தாலம்மன் எழுந்தருளி பூஞ்சோலைக¢கு சென்றது. 3&வது நாள் காலையில் அய்யனார், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்கள் வர்ணகுதிரை அலங்காரத்துடன் கோவிலுக¢கு சென்றது.  விழாவையட்டி சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக¢தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மரியாதைகாரர்கள், கிராம பொதுமக¢கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்