முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரியில் மாணாக்கர்களுக்கு வழிகாட்டும் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த கருத்தரங்கு

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில்,பொன்னேரி கல்வி மாவட்டத்தில் அடங்கிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவ,மாணவியர்களுக்கென வழிகாட்டும் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த கருத்தரங்கு,தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி பொன்னேரியில் நடைப்பெற்றது.

கையேடுகள்

இதில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான படிப்புகள்,நுழைவுத்தேர்வுகள் பற்றி விரிவாக விளக்கும் கையேடுகள் வழங்கப்பட்டன.இதனை மாண்புமிகு ஊரக தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி,எம்.பி.வேணுகோபால்,பொன்னேரி எம்.எல்.ஏ.பலராமன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன்,பொன்னேரி சாராட்சியர் தண்டபாணி,வட்டாட்சியர் ஐவண்ணன்,தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன்,மாவட்ட உடற்கல்வி அலுவலர் நரசிம்மராவ் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்