முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியா: சாலையோர குண்டுவெடிப்பில் 20 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

மொகடிஷூ  - சோமாலியா நாட்டின் ஷபெல்லே மாகாணத்தில் சாலையோர குண்டு வெடிப்பில் சிக்கிய மினி பஸ்சில் பயணம் செய்த 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீடீர் வெடிப்பு
சோமாலியா நாட்டின் ஷபெல்லே மாகாணத்தில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த மாகாணத்தில் உள்ள கோல்வேன் கிராமத்தின் வழியாக நேற்று முன்தினம் ஒரு மினி பஸ் சென்றபோது சாலையோரம் கிடந்த ஒரு குண்டு திடீரென்று வெடித்து சிதறியது.

உடல் சிதறி பலி
இந்த தாக்குதலில் பஸ்சில் வந்த 20 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஆறுபேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்