முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ச.ஜெயந்தி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  மாவட்ட கலெக்டர்   ச.ஜெயந்தி  கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட பிரிவில், 2016- 2017-ம் ஆண்டிற்கான  மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகள் ஆண்கள்/பெண்கள் (இருபாலருக்கும் ) கடந்த 01.03.2017 அன்று நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர்  கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

      இந்நிகழ்வின்போது,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நோயலின்ஜான் உள்ளிட்ட தொடர்புடைய  அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்