முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்காபுரம் டெக்ஸ்வேலியில் கல்வி வழிகாட்டி கண்காட்சி

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      ஈரோடு

அருகே உள்ள, கங்காபுரம் டெக்ஸ்வேலி சர்வதேச ஜவுளி மையத்தில், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் அடுத்து என்ன படிக்கலாம்? என்பது குறித்து வழிகாட்டும் கல்வி கண்காட்சி  தொடங்கியது. டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் தேவராஜன் முன்னிலை வகித்தார். ஈரோடு டி.ஆர்.ஓ சதீஸ், கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்த, 80 கல்விக்குழு நிறுவனங்கள் அரங்கம் அமைத்து உள்ளன. பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் மட்டுமின்றி சிறப்பு பாடப்பிரிவுகள் பற்றிய கண்காட்சியும் இடம் பெற்று உள்ளது. தினமும் கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கு நடக்கிறது. கண்காட்சி (10ம் தேதி) மாலை வரை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்