முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளிகளுக்கு ரூ.3,56,500- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வெங்கடாசலம் வழங்கினார்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

 தேனி.-  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (10.04.2017) இன்று மாவட்ட கலெக்டர்வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 151 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

     கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான தீருதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.60,000-த்திற்கான காசோலையினையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500- வீதம் ரூ.90,000-த்திற்கான காசோலையினையும், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.15,000- வீதம் ரூ.1,05,000-த்திற்கான காசோலையினையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் தனது ஒரே மகனை, ஒன்றுக்கு மேற்ப்பட்ட மகன்களை இராணுவப்பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கான ஊக்க தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.58,000-த்திற்கான காசோலையினையும், தனது ஒரே மகனை இராணுவப்பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கான ஊக்க தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.43,500-க்கான காசோலையினையும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.3,56,500- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

      இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள்  மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.கிருஷ்ணவேனி  முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் (ஓய்வு) மா.சுரேஷ்குமார்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்  உதவி இயக்குநர் (கனிமம்) சாம்பசிவம்  தாட்கோ பொது மேலாளர் தங்கவேல்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்