முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், திருப்பூர் மாவட்டத்தின் குடிநீர் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்  மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   முன்னிலையில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திருபுபூர் மாவட்டதில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தொடர்பாக   அமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், தற்போதைய வறட்சியான சூழ்நிலையில் பொது மக்களின் அடிப்படைத்  தேவையான குடிநீரினை எவ்வித தங்குதடையுமின்றி சீரான முறையில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் பொது மக்களுக்கு லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்வதற்கும் மற்றும் ஆழ்துளை கிணறுகளை சரிசெய்யவும், தேவையான பகுதிகளில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும்  நடவடிக்கை எடுத்திடவும் அலுலவர்களுக்கு  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு),  கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு (காங்கேயம்), காளிமுத்து (தாராபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, திருபுபூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகன், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் , மின்சார வாரிய அலுவலர்கள்  உட்பட  தொடர்புடைய  அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்