முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம்-நேரு பூங்கா சுரங்கபாதையில் அடுத்த மாதம் ரெயில் ஓடும்: மெட்ரோ நிர்வாக இயக்குனர்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      சென்னை

திருமங்கலம் மற்றும் நேரு பூங்கா சுரங்கபாதையில் அடுத்த மாதம் ரெயில் ஓடும் என்று மெட்ரோ நிர்வாக இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார். சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரமும் பணிகள் நடந்து வருகிறது.உயர்மட்ட பாதை மற்றும் சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. கடந்த 29-6-2015 அன்று கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உயர்மட்ட பாதையில் ரெயில் சேவை தொடங்கி நடந்து வருகிறது.அதன்பின் சின்னமலை முதல் விமான நிலையம் வரை, ஆலந்தூர்-பரங்கிமலை வரை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.திருமங்கலம் - நேரு பூங்கா வரை உள்ள 7.63 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுரங்கப்பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த முதல் சுரங்கப்பாதையில் விரைவில் ரெயில் சேவை தொடங்குகிறது. சுரங்கப் பாதை பணிகளை மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-முதல் சுரங்கப் பாதையில் பாதுகாப்பு பணிகள் குறித்து நேற்றும் இன்று ஆய்வு செய்யப்படுகிறது. கோயம்பேடு முதல் செனாய் நகர் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. செனாய் நகர் முதல் நேரு பூங்கா வரை ஒருவழி பாதை அமைக்கப்பட்டுள்ளது.சுரங்கப் பாதையில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்கிறோம். தண்ட வாளத்தின் உறுதிதன்மை, எஸ்கேலட்டர், விபத்து காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக தப்பிக்கும் வழிகள், தீ விபத்தை தடுப்பது போன்ற பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்கிறோம்.மேலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், கருவிகளை ஊழியர்கள் எவ்வாறு பயன்படுத்த அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் கேட்கப்படுகின்றன.இந்த பாதுகாப்பு ஆய்வு குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப் பாதையில் எப்போது ரெயில் சேவை தொடங்கும் என்பதை மத்திய - மாநில அரசுகள் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறி னார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்