முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலாடி அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ.நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.97 லட்சம்மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஏ.நெடுங்குளம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் கீழ் 114 பயனாளிகளுக்கு ரூ.97லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்;வு காணும் விதமாகவும், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாகவும் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும்  திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம்  விளக்கி கூறப்படுகிறது. 

இன்று நடைபெறும் இம்முகாமில் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 114 பயனாளிகளுக்கு ரூ.97.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.  மேலும் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருங்கிணைந்து, கட்டாலங்குளம் முதல் டி.வேப்பங்குளம் வரை ரூ.4.80 லட்சம் மதிப்பில் 32 மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்கு பொருத்தும் பணிகளுக்காகவும், ஏ.நெடுங்குளம் கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் பள்ளி மராமத்து பணிகளுக்காகவும், ரூ.50 ஆயிரம் மதிப்பில் உறைகிணறு அமைப்பதற்காகவும், ரூ.50 ஆயிரம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர் அமைப்பதற்காகவும், கட்டலாங்குளம் மற்றும் வெள்ளையாபுரம் கிராமத்தில் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் உறைகிணறு  அமைக்கும் பணிகளுக்காகவும் என ஆக மொத்தம் 6 பணிகளுக்கு ரூ.7.80 லட்சம்  மதிப்பில் நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.  விரைவில் அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பட்டா நிலங்களில் 68657.97.5 ஹெக்டேர் பரப்பளவிலும், அரசு நிலங்களில் மொத்தம் 36259.06.0 ஹெக்டர் பரப்பளவிலும் என மொத்தம் 104947.03.5 எக்டேர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு இதுவரை ஏறத்தாழ 16ஆயிரம் எக்டேர் பரப்பளவிலான சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதில் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.  தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வேருடன் அகற்றி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத நிலையினை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். 

இதுதவிர தற்போது நிலவும் வறட்சியான காலக்கட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட சாத்தியக்கூறு உள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவ்விடங்களுக்கு உகந்த மாற்றுத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடும் வகையில் ஊரக மற்றும் நகர் பகுதிகளின் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக இதுவரை 941 பணிகளுக்காக ரூ.12.77 கோடி மதிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 1,38,108 விவசாயிகளுக்கு ரூ.45.59 கோடி மதிப்பில் வறட்சி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். அதனைத்  தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் கடலாடி வட்டம், இருவேலி கிராமத்தில் உள்ள கண்மாயில் பொதுப்பணித்துறை (குண்டாறு உப வடிநிலக்கோட்டம்) மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளையும், கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடியில் பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ஏர்வாடி தர்ஹாவில் இருந்து நாச்சியம்மை வலசை வரையிலான 1.9 கி.மீ நீள அளவிற்கு தார்சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பணிகளை துரிதமாக மேற்கொண்டு காலதாமதமின்றி  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்முகாமில்  பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, மாவட்;ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட தொழில்மைய மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகானந்தம், வட்டாட்சியர் கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சைமாள் உள்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago