எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வருவாய்த்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 207 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28.95 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி முன்னிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று (12.04.2017) வழங்கினார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் மற்றும் முன்னேற்றத்திற்காகவும் சிறப்பான திட்டங்கள் அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார்கள் அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியினை உண்டாக்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களை தாய் உள்ளத்தோடு வாரி வழங்கி உள்ளார்கள். அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்காக நமது மாவட்டத்தில், இது நாள் வரையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக 18801 நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் கை, கால் பாதிக்கப்பட்டோர் 10120 நபர்களுக்கும், பார்வையற்றோர் 856 நபர்களுக்கும், குறைந்த பார்வை உடையவர்கள் 409 நபர்களுக்கும், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 3041 நபர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியாவர்கள் 4066 நபர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டோர் 222 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேண்டிய மறுவாழ்வு உதவிகள் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் 4381 நபர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1000/-வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் இம் மாவட்டத்தில் 2515 மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கும், 292 கடும் மாற்றுத்திறனாளிகளுக்கும், 67 தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு என மொத்தம் 2874 மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையாக மாதம் ரூ.1500/- வீதம் வழங்கப்பட்டு வருகின்றது மற்றும் தொழுநோயால் பதிக்கப்பட்ட 40 நபர்களுக்கு மாதம் ரூ.1000/- வீதம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இது தவிர திருமண நிதியுதவித் திட்டங்கள், சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்க வங்கிக் கடன் மானியத் திட்டம், கல்வி பயிலும் மாணவஃமாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், மற்றும் இலவச பேருந்து பயணச் சலுகை திட்டம், போன்றவை வழங்கப்படுகின்றன.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து விதமான உதவி உபகரணங்கள், இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, நவீன காதொலிக்கருவிகள், நவீன செயற்கை அவயங்கள், (கை, கால்) போன்றவை வழங்கப்படுகின்றன. 2017-2018-ம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையில் 2000 இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் கொள்முதல் செய்ய அறிக்கை வெளியிடப்பட்டள்ளது. (2016-2017ம் நிதியாண்டில் 1000 இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டன.) முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என 2017-2022 - ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு நிதி நிலை அறிக்கையில் 10000 - ம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 கோடி திட்ட மதிப்பில் தொழில் திறன் மேம்பாடு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெறுகின்ற மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.
இன்று நடைபெற்ற விழாவில், வருவாய்த்துறையின் சார்பில் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சார்ந்த 132 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 12,000/- வீதம் ரூ.15,84,000/- மதிப்பில் மாதாந்திர உதவித்தொகையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,78,950/- மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், விபத்தினால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,40,000/- மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84,000/- மதிப்பில் சக்கர நாற்காலிகளும்,11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.65,000/- மதிப்பில் இலவச பேருந்து பயணச் சலுகைகளும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு கடும் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.4,56,000/-ம் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.2,88,000/-ம் என 207 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28,95,950/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், சமூகப் பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் சுகவனம், வட்டாட்சியர்கள் தயானந்தன் (உடுமலைப்பேட்டை), முத்துராமன் (மடத்துக்குளம்) ஜி.வி.ஜி. நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.